திருச்சி: சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் வி.கே சசிகலா தரிசனம் மேற்கொண்டார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் தரிசனம் மேற்கொண்டு வரும் வி.கே சசிகலா இன்று திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் உள்ள மும்மூர்த்திகள் திருத்தலமான உத்தமர் கோவிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.
வி.கே சசிகலாவை வரவேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் திரண்டு உற்சாக வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சிக்கு வருகை தந்த சசிகலாவிற்கு அ.ம.மு.க அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் மற்றும் திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிவன்,பிரம்மா,விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் வீற்றிருக்கும் உத்தமர்கோவில் திருத்தலத்தில் முன்னதாக பெருமாளை தரிசனம் செய்த பின்னர் தாயார் சன்னதி,சிவன் சன்னதி பிரம்மா,சரஸ்வதி உள்ளிட்ட சன்னதிகளில்
வி.கே சசிகலா தரிசனம் மேற்கொண்டார்.
இதே போல் திருவாசி அருகே உள்ள மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்,குணசீலம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் வி.கே சசிகலா தரிசனம் மேற்கொண்டார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.