Categories: தமிழகம்

மண் வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வு: 100 நாட்களில் 27 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொள்ளும் சத்குரு..!!

கோவை: மண் வளத்தை பாதுகாக்க சர்வதேச அளவிலான அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஈஷா நிறுவனர் சத்குரு 100 நாட்களில் 27 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார்.

இதற்காக அவர் கோவை வாலாங்குளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் லண்டன் செல்வதற்காக விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார். அப்போது சத்குரு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது,மண்ணை காப்பாற்ற உலக முழுவதும் சேர்ந்து மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. உலக விஞ்ஞானிகள் தோரயாமாக 60 முதல் 80 பயிர்கள் மட்டும் இருக்கும் என்கின்றனர்

வரும் 2045ம் ஆண்டு உணவு தயாரிக்கும் சக்தி 40 சதவீதமாக குறையும் என்கின்றனர் மக்கள் தொகை 9 பில்லியனுக்கு மேல் வரும் போது, மக்கள் தொகைக்கான உணவு உற்பத்தி குறைந்து இருக்கும். இப்போது இதை மீட்டுடெடுக்க வாய்ப்பு இருக்கின்றது.சில
பாலிசி மாற்றம் மூலம் மண்வளம் பாதுகாக்க முடியும்

உலகம் முழுவதும் 730 அரசியல் கட்சியினருக்கு கடிதம் எழுதி இருக்கின்றேன்.மண், மண்ணில் உள்ள உயிர்கள் குறித்து தேர்தல் வாக்குறுதிகளில் ஏதேனும் ஒன்றை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன். 3 தன்னார்வ அமைப்புகள் ஈஷாவுடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்கின்றோம். இசை, சினிமா, விளையாட்டு என அனைத்துதுறை வல்லுனர்களும் நம்முடன் இருக்கின்றனர்.

வரும் 21ம் தேதி மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த 100 நாட்களில் 27 நாடுகளுக்கு 30 ஆயிரம் கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில் பயணிக்க இருக்கின்றேன். இந்த நேரத்தில் பல சவால்களை கடக்க வேண்டும். பனி, வெயில் , மழை, போர் என அனைத்து சூழல்களையும் கடந்து இந்த பயணம் இருக்கும்

கடந்த 2 வருடத்தில் எங்கே போனாலும் எல்லாரும் மண் பாதிப்பு தெரிகின்றது. பூனைக்கு மணி கட்ட முட்டாள் தேவை என்பதற்காக நான் இதை செய்கின்றேன் உக்ரைனில் போர் காரணமாக சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் மத்திய அரசுடன சேர்ந்து உதவி வருகின்றோம். தங்குமிடம், போக்குவரத்து போன்றவை ஏற்படுத்தப்படுகின்றது . தற்போது உக்ரைனில் ஏற்பட்டு இருப்பது கஷ்டமான நிலை. ரஷ்யாவுடன் பேசி வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கின்றார்கள்

உக்ரைனில் நிற பிரச்சினை இருக்கின்றது.தோலை பார்த்து ரயிலில் ஏற்றுவதில்லை. ரஷ்யா வழியாக கொண்டு வரும் முயற்சி நல்ல முயற்சி.தூரம் அதிகம் என்றாலும் பாதுகாப்பானது. இன்னும் 11 ஆயிரம் பேர் அங்கிருகின்றனர். நீர்நிலைகள் நன்றாக இருக்க மண்ணை காக்க வேண்டும்.84 சதவீதம் தண்ணீர் விவசாயத்திற்கு போகின்றது

மண்ணில் இருக்கும் உயிர்சத்து .68 ஆக இருக்கின்றது. இதை 8 முதல் 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். உயிர்சக்தி வந்து விட்டால் 100 லிட்டர் நீரில் நடைபெறும் விவசாயம் 30 லிட்டரில் செய்ய முடியும்.மண் சத்தும் கொண்டு வர வேண்டும். உள்ளாட்சி தேர்தல் அரசியல் தேர்தல் கிடையாது. தனி நபர்களின் மீது கொண்டுள்ள நம்பிக்கயால் அந்த ஊரில் யார் வர வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்

UpdateNews360 Rajesh

Recent Posts

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

6 minutes ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

9 minutes ago

கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…

36 minutes ago

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

1 hour ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

2 hours ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

2 hours ago

This website uses cookies.