திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர கனரக வாகனங்களுக்கு நிரந்தரத் தடை விதித்த நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, திங்கட்கிழமை கடையடைப்பு, காத்திருக்கும் போராட்டம், லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் இரவு நேரத்தில் மட்டும் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், நேற்று முன்தினம் முதல் 12 சக்கர கனரக வாகனங்களும் நிரந்தரமாக இந்த பாதையில் செல்லக் கூடாது என தடை விதித்தது.
மேலும் 16.2 தன்னுடைய அளவுள்ள வாகனங்களுக்கு மட்டுமே திம்பம் மலைப்பாதையில் அனுமதி உண்டு என உத்தரவு பிறப்பித்தது.
இது குறித்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் லாரி உரிமையாளர்கள், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் இறுதியில் நாளை மறுநாள் திங்கட்கிழமை சத்தியமங்கலத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் எனவும், அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் லாரிகள் ஓடாது என்றும், பண்ணாரி சோதனை சாவடியில் லாரி உரிமையாளர்களின் காத்திருக்கும் போராட்டமும் நடைபெறும் எனவும் முடிவெடுக்கப்பட்டு போராட்டம் அறிவிப்பு செய்தனர்.
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
This website uses cookies.