சென்னை : மயிலாப்பூர் அருகே ஆர்ஏ புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முதியவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்த சாமி நகர் இளங்கோ தெரு பகுதியில் கடந்த 29ஆம் தேதி முதல் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகளில் அமைந்துள்ள வீடுகளை இடிக்க நீதிமன்றம் உத்தரவு அளித்தும், பொதுமக்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று கண்ணையர் என்ற முதியவரின் வீட்டை அகற்ற பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது தனது வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த அவர், உடலில் மண்ணென்ணை ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் மற்றும் இளைஞர்கள் முதியவரை மீட்டனர்.
சுமார் 40% தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட முதியவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் அரசு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பொதுப்பணித்துறை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் தற்காலிகமாக பணியை நிறுத்தியுள்ளனர். கடந்த 29ஆம் தேதியில் இருந்து ஆக்கிரமிப்பு பணி நடந்து வரும் நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.