சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை, கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் போலீசார் கைது செய்தனர். கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை 7 காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி தேனி மாவட்ட PC பட்டி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன் விசாரணைக்கு வந்தது.
மேலும் படிக்க: சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம்… சிறுமியை துரத்திய தெருநாய்கள்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!
அப்போது, சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்ட நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி செங்கமலசெல்வன் உத்தரவிட்டார்.
மேலும், காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்த நிலையில், பெண் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பெண் காவலர்களால் சவுக்கு சங்கர் அழைத்துசெல்லப்பட்டார்.
இதனிடையே, சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த நெறியாளர் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் ஃபெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு திருச்சி மகிளா நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. நாளை மதியம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.