கோவை : காரமடை அருகே மருதூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த எஸ்பிஐ ஏடிஎம் மெஷினை உடைத்து முகமூடி அணிந்த நபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கக்கூடிய காரமடை அடுத்த மருதூரில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் ஆனது உள்ளது.
காரமடை வெள்ளியங்காடு தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஏடிஎம் மெஷின் உள்ள நிலையில் இன்று அதிகாலை ஒன்று முப்பது மணி அளவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மெஷின் அறையில் நுழைந்து மெஷினை உடைக்க முயற்சித்துள்ளார்.
சுமார் ஐந்து நிமிடங்களாக அந்த மர்மநபர் ஏடிஎம் மிஷினில் சில பகுதிகளை உடைத்து உள்ளே இருந்த பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார். இருப்பினும் பணத்தை எடுக்க முடியவில்லை.
இதனை அடுத்து சாலையில் சில வாகனங்கள் வருவதை கண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை ஏடிஎம் மெஷின் உடைத்து இருப்பதைக் கண்டு அந்த பகுதி மக்கள் காரமடை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்
தகவலின்பேரில் காரமடை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மர்ம நபரை முகமூடி அணிந்து ஏடிஎம் மிஷினை உடைக்க முயற்சித்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் தற்போது காரமடை போலீசார் இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் பகுதியில் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் மருதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.