கோவை : காரமடை அருகே மருதூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த எஸ்பிஐ ஏடிஎம் மெஷினை உடைத்து முகமூடி அணிந்த நபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கக்கூடிய காரமடை அடுத்த மருதூரில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் ஆனது உள்ளது.
காரமடை வெள்ளியங்காடு தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஏடிஎம் மெஷின் உள்ள நிலையில் இன்று அதிகாலை ஒன்று முப்பது மணி அளவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மெஷின் அறையில் நுழைந்து மெஷினை உடைக்க முயற்சித்துள்ளார்.
சுமார் ஐந்து நிமிடங்களாக அந்த மர்மநபர் ஏடிஎம் மிஷினில் சில பகுதிகளை உடைத்து உள்ளே இருந்த பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார். இருப்பினும் பணத்தை எடுக்க முடியவில்லை.
இதனை அடுத்து சாலையில் சில வாகனங்கள் வருவதை கண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை ஏடிஎம் மெஷின் உடைத்து இருப்பதைக் கண்டு அந்த பகுதி மக்கள் காரமடை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்
தகவலின்பேரில் காரமடை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மர்ம நபரை முகமூடி அணிந்து ஏடிஎம் மிஷினை உடைக்க முயற்சித்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் தற்போது காரமடை போலீசார் இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் பகுதியில் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் மருதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.