தமிழகம்

தனியார் பள்ளி தாளாளரை கடத்திய ஆசிரியர்.. தருமபுரியை அதிர வைத்த சம்பவம்!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோபாலபுரத்தை சேர்ந்தவர் செம்முனி (68). தனியார் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், சேலம் திருமணிமுத்தாறு பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனராகவும் உள்ளார்.

இவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகி துறவியாகியுள்ளார். இவருக்கு சித்தேரி பேரேரி புதூர் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த இனியவன் (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

செம்முனி நடத்தி வரும் தனியார் பள்ளி நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதையடுத்து ₹15 லட்சம் பெற்றுக் கொண்டு ஒப்பந்தஅடிப்படையில், அரசு பள்ளி ஆசிரியர் இனியவன் தாயார் அமிர்தவள்ளிக்கு, தனியார் பள்ளியை கடந்த ஆண்டு (2023) ஜூன் முதல் நடத்திக் கொள்ள எழுதி கொடுத்துள்ளார்.

மேலும் பள்ளியில் வரும் லாபத்தில் 10 சதவீதம் வழங்க வேண்டும் என செம்முனி கூறியுள்ளார். இந்த பள்ளியில் தற்போது 101 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆனால் பள்ளிக்கு அங்கீகாரத்தையும் செம்முனி பெற்றுத் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதையடுத்து இனியவன் தாயார் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும் தராததால், ஏ.பள்ளிப் பட்டி போலீசில் அமிர்தவள்ளி கடந்த நவம்பர் 18ம் தேதி புகார் கொடுத்தார். அன்று முதல் செம்முனி விசாரணைக்கு வராமல் இருந்துள்ளார்.

இதையும் படியுங்க: ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

இந்நிலையில் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி சாய்பாபா கோயிலில் செம்முனி சாமி கும்பிட்டுவிட்டு அங்கு பேசிக் கொண்டு இருந்தார். அப் போது இனியவன் உள்ளிட்ட 6 நபர்கள் அங்கு சென்று, செம்முனியை தாக்கி காரில் கடத்திச் சென்றனர்.

இது பற்றி சாய்பாபா அறக்கட்டளை தலைவர் பன்னீர்செல்வம், பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று காரில் கடத்தப்பட்ட செம் முனியை தேடினர்.

அரூர்- சேலம் நெடுஞ் சாலையில் புதுப்பட்டி சுங்க சாவடி பகுதியில் சென்றவர்களை விரைந்து சென்று மடக்கி பிடித்தனர். இதையடுத்து இனியவன் (41), மருக்காலம்பட் டியை சேர்ந்த தீர்த்தகிரி (45), அம்பேத்குமார் (41), சுரேஷ் (29), மனோஜ்குமார் (29), மூக்காரெட்டிப்பட்டியை சேர்ந்த யசேந்திரன் ஆகிய 6பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத் தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பெண்களை மதிக்கிற மாதிரி நடிப்பாங்க; ஆனா சுயரூபமே வேற- மாளவிகா மோகனன் யாரை சொல்றாங்க?

கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…

2 hours ago

பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!

தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…

2 hours ago

தவெகவின் உண்மையான கட்டமைப்பு என்னவென்று இன்று தெரியும்.. ஆதவ் அர்ஜூனா சஸ்பென்ஸ்!

தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…

2 hours ago

ஓ கொரளி வித்தையா? விஜய் ரசிகர்களை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்! ரவுண்டு கட்டிட்டாங்க…

விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…

2 hours ago

அஜித் படத்தை காப்பியடித்த ஹாலிவுட்…? அப்பட்டமான காப்பி : அதுவும் இந்த படமா?

சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…

3 hours ago

This website uses cookies.