தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி சிறுமி ஆண்டிபட்டி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சிறுமியை ஆசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த விமல் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சிறுமியை ஒரு சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தேனி மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தியதில் அந்தச் சிறுமியை விமல் என்பவர் காதலித்து அந்த சிறுமியுடன் பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும், அதனை வீடியோவாக பதிவு செய்து சிறுமியை மிரட்டி தனது ஆசாரிபட்டி ஊரில் உள்ள நண்பர்கள் ஏழு பேருடன் சிறுமியை தகாத உறவு கொள்ள வைத்ததும் தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் சிறுமி கற்பம் அடைந்த நிலையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பும் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க: வீட்டுக்கு அடிக்கடி வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.. வயிற்று வலியால் தவித்த +2 மாணவி : பாய்ந்தது போக்சோ!
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் சிறுமியை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்த விமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற ஏழு பேர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.