கடலூரில், பள்ளி விடுதி கழிவறையில் மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர்: விழுப்புரம் மாவட்டம், சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் கோவஸ்ரீ (14). இவர், கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், அங்குள்ள விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி, இவர் உடல்நிலை பாதித்த நிலையில் விடுதியில் இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர், அவர் அங்குள்ள கழிவறை பகுதியில் தற்கொலை செய்து இறந்ததாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இது குறித்த தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று மாணவியின் சடலத்தை மீட்டனர்.
தொடர்ந்து, பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவியின் சடலத்தை அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் தாட்கோ அலுவலகம் முன்பு, உயிரிழந்த மாணவி கோவிஸ்ரீயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டனர். தொடர்ந்து, தனது மகளை பள்ளி நிர்வாகத்தினர்தான் கொலை செய்து விட்டதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கையை வீடியோ மூலம் காட்ட வேண்டும் எனவும், அதன் மூலம் உடலில் காயங்கள் உள்ளதா என்பதை நாங்கள் அறிந்து கொள்வோம் எனவும், மாணவியின் இறப்புக்கு உண்மையான விசாரணை செய்து, காரணமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: விளையாடிக் கொண்டிருந்த சிறுமி.. பதுங்கிய இளைஞருக்கு தேடிவந்து தர்ம அடி.. கரூரில் பரபரப்பு!
பின்னர், இது குறித்து தகவலறிந்து வந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாணவி சம்பந்தமான வழக்கு நெல்லிக்குப்பம் போலீசாரின் விசாரணையில் உள்ளதாகவும், அவர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனக் கூறியதன் பேரில், உறவினர்கள் கலைந்து சென்றனர்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.