சென்னை அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாப்பூர் முத்து நகர் பகுதியைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவர், கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான வகுப்புகளை வீட்டில் நடத்தி வருகிறார். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு ஒரு மகன், மகள் உ ள்ள நிலையில், மகள் ஜனனி மயிலாப்பூரில் உள்ள பெண்கள் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, ஜனனி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார், ஜனனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.
பின்னர் மாணவியின் அறையை சோதனை செய்த போது, ஜனனி எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், “இரவில் தூங்கும் போது அடிக்கடி தூக்குப்போடுவது போன்ற கனவு வருகிறது. இதனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, 3 படத்தை போல நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன். அம்மா, அண்ணன் மற்றும் நண்பர்களை பிரிவது மிகவும் வருத்தமாக உள்ளது” என எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…
This website uses cookies.