ஸ்ரீபெரும்புதூர் அருகே மதிய உணவில் எலி மருந்து கலந்து தற்கொலைக்கு முயன்ற மாணவிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே சிருமாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ஜெயஶ்ரீ (15). இவர் சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், ஜெயஶ்ரீ சரிவர படிக்காததால் அவரது பெற்றோர்கள் தொடர்ந்து கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவி ஜெயஶ்ரீ மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்து வந்த ஜெயஶ்ரீ ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி ஜெயஶ்ரீ, வீட்டில் இருந்து எடுத்து வந்த எலி மருந்தை மதிய உணவு சாப்பிடும்போது, உணவில் எலி மருந்து கலந்து சாப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த திருமங்கலம் கண்டிகை பகுதியைச் சேர்ந்த தோழியான மாணவி ஏகலட்சுமி(15), உன்னுடன் நானும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்கிறேன் என கூறி எலி மருந்து கலந்த உணவை ஏகலட்சுமியும் சாப்பிட்டுள்ளார்.
இதைப் பார்த்த சக மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். உடனே ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலிசார் மொளச்சூர் பள்ளி ஆசிரியர் மற்றும் சக மாணவிகளிடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மொளச்சூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இருவரும் உணவில் எலி மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பள்ளி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.