ராமநாதபுரம் அருகே நண்பர்களோடு மது அருந்திய 12ம் வகுப்பு பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமுதி அருகே உள்ள போத்த நதி கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவனுக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதுவும் கடந்த 6 மாதமாக நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதேவேளையில், மாணவனுக்கு அல்சர் இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் நண்பர்களோடு சேர்ந்து மாணவன் மீண்டும் மது அருந்தி உள்ளார். அப்போது அவருக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்த மாணவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் மீண்டும் வயிற்றுவலி அதிகமாகியுள்ளது. பின்னர், கமுதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.