ராமநாதபுரம் அருகே நண்பர்களோடு மது அருந்திய 12ம் வகுப்பு பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமுதி அருகே உள்ள போத்த நதி கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவனுக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதுவும் கடந்த 6 மாதமாக நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதேவேளையில், மாணவனுக்கு அல்சர் இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் நண்பர்களோடு சேர்ந்து மாணவன் மீண்டும் மது அருந்தி உள்ளார். அப்போது அவருக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்த மாணவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் மீண்டும் வயிற்றுவலி அதிகமாகியுள்ளது. பின்னர், கமுதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.