ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி அரசு டவுன் பஸ் சென்றது. கரிக்கல் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பஸ் படியில் ஆபத்தான முறையில் தொங்கியபடி ஒரு மாணவன் வந்துள்ளான்.
இதைக்கண்ட பஸ் டிரைவர் பாலாஜி பஸ்சை நிறுத்திவிட்டு அந்த மாணவனிடம் உள்ளே வரும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவன் டிரைவரை பயணிகள் கண்முன் தகாத வார்த்தையால் திட்டியுள்ளான்.
மேலும் தான் வைத்திருந்த பிளேடால் டிரைவரின் முகத்தை கிழித்ததாக கூறப்படுகிறது. இதில் டிரைவரின் முகத்தில் ரத்தம் வழிந்தது. இதைக்கண்ட பயணிகள் கூச்சலிட்டனர்.
மேலும் தப்ப முயன்ற அந்த மாணவனை பிடித்தனர். இதுகுறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த மாணவனை பிடித்து விசாரித்தனர்.
அந்த மாணவன் அரசு நிதியுதவி பள்ளியில் பிளஸ் 1 படித்து வருவதும் என தெரியவந்தது. மாணவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காயமடைந்த டிரைவர் பாலாஜி சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.