கரூரில் பள்ளியில் கொடுக்கப்பட்ட மாத்திரையை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த 6ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் குடல்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
அதனை சாப்பிட்ட ஒரு மாணவன் வாந்தி எடுத்துள்ளான். அதனை பார்த்த மற்ற மாணவ, மாணவிகளும் வாந்தி எடுத்ததுடன், மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் இயல்பு நிலையில் உள்ளனர்.
இருந்த போதிலும், அவர்களை சிறிது நேரம் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வைத்து அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவ, மாணவிகளின் வாந்தி, மயக்கத்திற்கான காரணம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.