தருமபுரி ; பாலக்கோடு அருகே மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் உள்ள பென்ச், சேர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் 11 மற்றும் 12ம் வகுப்புக்கு செய்முறை விளக்கம் தேர்வு கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் செய்முறை தேர்வு முடிந்த பிறகு நேற்று அ.மல்லாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியின் வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க் , ஸ்விட்ச், மின்விசிறி போன்ற தளவாட பொருட்களை அடித்து உடைக்கப்பட்டது . மேலும் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், இனி இது போன்ற தவறுகள் நடக்காது என்றும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் உறுதி அளித்ததின் பேரில் பள்ளி நிர்வாகம் மூடி மறைக்கும் நிலையில் உள்ளது.
இது போன்ற சம்பவம் இப்பள்ளியில் மூன்றாவது முறை நடைபெறுகிறது. பள்ளி நிர்வாகமும் சரிவர கவனிக்காததால் மாணவர்களிடையே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் ஒரு சில மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என தெரிகிறது.
ஆகையால் மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித் துறையும், அப்பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளியின் சொத்துக்களை உடைக்கும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும்,மாணவர் சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
This website uses cookies.