உதயநிதி பிறந்தநாளுக்காக தென்காசி ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள பள்ளியில் மாணவர்களை ஒன்றிணைத்து ஹேப்பி பர்த்டே உதயண்ணா என கூற வைத்த வீடியோ பேசுபொருளாக மாறியுள்ளது.
இது குறித்து பாஜக தனது X தளப்பக்கத்தில், தென்காசி மாவட்டத்தில் ஐந்தருவி அருகே உள்ள ஒரு பள்ளியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி சிறார்களை பட்டப்பகலில் மொட்டை வெயிலில் நிற்க வைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூற கட்டாயப்படுத்தியுள்ள, அன்பில் மகேஷ் அவர்களின் அடியாட்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். “உங்கள் அநீதிகளுக்கு ஒரு அளவே இல்லையா தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களே? தென்காசி மாவட்டம் ஐந்தருவி சாலையில் உள்ள ஒரு பள்ளியில், பள்ளிச் சிறுவர்களை உச்சி வெயிலில் நிற்க வைத்து உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர் உங்களின் கழக உடன் பிறப்புகள்.
இதையும் படியுங்க: எல்லா ஏரியாவிலும் கில்லி.. இத்தனை கோடிக்கு அதிபதியா உதயநிதி ஸ்டாலின்?
தமிழக மாணவர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து உங்கள் இஷ்டம் போல ஆட்டிப் படைப்பது இது ஒன்றும் முதன்முறையல்ல.
உங்கள் தந்தையான தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், உங்களுக்கு 100/100 மதிப்பெண் வழங்கி அழகுபார்த்தது இதற்குத்தானா? பிறந்தநாள் வாழ்த்து என்பது அன்பின் பேரில் கிடைப்பது என்பதை மறந்துவிட்டு, வாழ்த்து சொல்லச் சொல்லி பள்ளிக் குழந்தைகளை இவ்வாறு கட்டாயப்படுத்துவது தான் திராவிட மாடல் அரசா?
உங்களின் தற்பெருமையைத் தம்பட்டம் அடித்துக் கொள்ள தமிழக பள்ளி மாணவர்கள் கிடைத்தார்களா?” என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே இச்சம்பம் குறித்து விசாரணை நடத்தக்கோரி தமிழக பாஜக தொடக்கப் பிரிவு தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில் பாஜக நிர்வாகிகள் தென்காசி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது..
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
This website uses cookies.