சென்னை : சென்னையில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூரைச் சேர்ந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மே மாதம் தான் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்த நிலையில், கல்லூரி சேருவதற்காக, கடந்த மாதம் 30ம் தேதி கலந்தாய்வுக்காக, மாநில கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவன், வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாணவனின் தற்கொலை சம்பவம் தொடர்பாக அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது, தான் பயின்று வந்த பள்ளியில் ஷர்மிளா என்ற ஆசிரியை மாணவனை காதலித்து வந்ததும், சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், மாணவனிடம் இருந்து தொடர்பை ஷர்மிளா முறித்துக் கொண்டது தெரிய வந்துள்ளது.
ஆசிரியையுடனான காதல் முறிவால் விரக்தி அடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆசிரியை ஷர்மிளாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.