திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பள்ளி ஆசிரியையின் தாலி செயினை பறித்து விட்டு தப்பிச்சென்ற இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்கள் பதுக்கி வைத்திருந்த தாலி செயினை கைப்பற்றி இளைஞர்களை சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காளவாய்பட்டி நடுநிலை பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் ராதா என்ற ஆசிரியை கடந்த 20ம் தேதி மதியம் மண்ணச்சநல்லூரில் இருந்து ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள் ராதா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தாலி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மண்ணச்சநல்லூர் தாலுக்கா, சுணைப்புகநல்லூரை சேர்ந்த 22 வயதான திலகன் என்கிற மணி அவரது நண்பரான புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த 22 வயதான முருகானந்தம் ஆகிய 2 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் மின் கம்பத்தின் கீழ் பகுதியில் குழிதோண்டி புதைத்து பதுக்கி வைத்திருந்த தாலி செயினை போலீசார் கைப்பற்றினர்.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.