Categories: தமிழகம்

தென்பெண்ணை ஆற்றில் குளித்த போது பாறை சரிந்து பள்ளி மாணவன் பலி : விழுப்புரம் அருகே சோகம்!!!

விழுப்புரம் : தென்பெண்ணை ஆற்றில் குளித்தபோது கருங்கற்கள் சரிந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே தளவானூர் காலனி பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் ராமகிருஷ்ணன் (வயது 13). இவன் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

மாணவன் ராமகிருஷ்ணன் பள்ளி முடிந்து மாலை 4.30 மணியளவில் அங்குள்ள தென்பெண்ணை ஆற்று பகுதிக்குச் சென்றான். அங்குள்ள அணைக்கட்டில் மண் அரிப்பை தடுப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கருங்கற்களில் ஏறி நின்றபடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராதவிதமாக கருங்கற்கள் சரிந்து விழுந்ததில் ராமகிருஷ்ணன் அங்குள்ள குட்டை பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் தவறி விழுந்தான். அவன்மீது கருங்கற்களும் சரிந்து விழுந்ததால் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டான்.

உடனே அருகில் இருந்த இளைஞர்கள் அங்கு விரைந்து சென்று ராமகிருஷ்ணனை மீட்க முடியாததால் இதுகுறித்த தகவல் அறிந்து விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு விரைந்து வந்து மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராமகிருஷ்ணனை பிணமாக மீட்டனர். அதன் பிறகு அவனது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்த காண்போரின் கல்நெஞ்சையும் உருக வைப்பதாக இருந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

7 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

7 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

8 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

8 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

9 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

9 hours ago

This website uses cookies.