திருப்பூர் : தாராபுரம் அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உடுமலைப்பேட்டை காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் முத்துப்பாண்டி. இவரது மகன் மணிகண்டராஜ் (வயது 42) தாராபுரம் அருகே உள்ள தாசர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவி (வயது 15) ஒருவருக்கு ஆசிரியர் மணிகண்டன்ராஜ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்காக உருவாக்கப்பட்ட தனி வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள மாணவியின் நம்பரை எடுத்து மாணவியின் தனி நபருக்கு ஆபாச வசனங்கள் ஆபாச போட்டோக்கள் மற்றும் பாலுணர்வை தூண்டும் வீடியோக்களை அனுப்பி உள்ளார்.
அதோடு இது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என அவர் மாணவியை மிரட்டி உள்ளதாகவும் தெரிகிறது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி இதுபற்றி தனது தாயாரிடம் தெரிவித்தார்.
பின்னர் மாணவியின் தாயார் அரசு பள்ளி தலைமையாசிரியர் வித்யாவிடம் தெரிவித்தார். பள்ளி ஆசிரியர் துரித நடவடிக்கையால் சைல்டு ஹெல்ப் லைன் மற்றும் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது . புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்லம் விசாரணை நடத்தி ஆசிரியர் மணிகண்ட ராஜ்ஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.