எத்தனை முறை புகார் கொடுக்கிறது.. அடிப்படை வசதிகள் கேட்டு தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளி மாணவிகள் மறியல்!!
கோவை ராஜவீதி அருகில் தேர் நிலைத்திடல் அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் தலைமை ஆசிரியரை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்டனர்.
கழிவறைகள் சுத்தமாக இல்லாததால் சுகாதாரமற்ற முறையில் கழிப்பறைகள் இருப்பதாக பள்ளி மாணவிகள் பல நோய்களுக்கு ஆளாகியுள்ளனர் மேலும் இதுகுறித்து பலமுறை தலைமை ஆசிரியர்களுக்கு புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமில்லாமல் பள்ளியில் உரிய குடிநீர் வசதி இல்லை என்றும் அதேபோல குடிநீர் சுத்தமாக இல்லை என்றும் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தற்கு T.C வாங்கிக் கொண்டு சுத்தமாக இருக்கும் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களை மிரட்டியதால் பெற்றோர்களுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலால் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று பள்ளி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு பள்ளி மாணவர்களை கலைந்து சென்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.