Categories: தமிழகம்

கொரோனாவை தாக்கத்தை பொறுத்தே பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் : அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!!

புதுச்சேரி : பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பள்ளி – கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் உடன் ஆலோசனை நடத்திய பின் அறிவிக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சிரித்துள்ளார்

புதுச்சேரி சிறையில் சமீபகாலமாக செல்போஃன் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகின்றது, இதனை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறை மற்றும் சிறைதுறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் இது தொடர்பாகவும் நீண்ட நாட்களாக சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்கள் விடுதலை செய்வது குறித்தும் கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தலைமை செயலர், காவல் துறை மற்றும் சிறை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் முதலமைச்சர் உடன் கலந்து பேசி பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

கொரோனா தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து கல்வி துறை அறிவிக்கும்.

அதே போல் தேர்வுகள் நடத்துவது குறித்து கல்வி துரை இயக்குனர், செயலருடன் ஆலோசித்து தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் எனவும் அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்தார்.

புதுச்சேரி சிறைச்சாலையை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும், சிறையில் செல்போன் பயன்பாடு, கஞ்சா மற்றும் போதை பொருட்களின் புழக்கம் குறித்து புகார்கள் வந்த வன்னம் உள்ளது.

இது தொடர்பாக அரசு உடனடியாக ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், சமீபத்தில் கூட இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சிறையில் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக ஜாமர் கருவிகள் செயல்பாட்டில் உள்ளதாக சிறை துறை தெரிவித்துள்ளது.

ஆனாலும் ஜாமர் கருவிகளை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் சிறைக்கு ஒரு குழு அமைத்து அரசு கண்காணிக்கும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சிறையில் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் கைதிகளுடன் தொடர்பு வைக்கும் சிறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

7 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

9 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

9 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

10 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

11 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

12 hours ago

This website uses cookies.