சென்னை : தமிழகத்தில் ஜுன் 13ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுதேர்வும், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் நடந்து முடிந்து விட்டது. 1 முதல் 9 வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டு விட்டது. அதேவேளையில், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிகிறது.
இதனிடையே, 2022-23ம் கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் வெளியிட்டார். அதாவது, தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும், 12-ம் வகுப்பிற்கு ஜூன் 20-ம் தேதியும், 11-ம் வகுப்பிற்கு ஜூன் 27-ம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று கூறினார்.
இதனிடையே, நாளை மறுநாள் முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதால், அதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதாவது, பள்ளி பேருந்து பரிசோதிக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்த பிறகே பேருந்துகளை இயக்க வேண்டும்.
பள்ளிகளில் மின் இணைப்புகளில் மின்கசிவு, கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா..? என்பதை ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும்.
சத்துணவு கூடங்களை தூய்மைப்படுத்தி மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்குவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடநூல்கள் பள்ளியில் பெறப்பட்டதை உறுதி செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.