திருவள்ளூர் : திருத்தணி அருகே கஞ்சா போதையில் மூன்று பேரை வாலிபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அருகே நல்லாட்டூர் கிராமத்தில் வசிப்பவர்கள் ஆறுமுகம்(55), தேசன் (62), இவரது மகன் பாக்கியம் (53) ஆகிய மூவரும் நேற்று இரவு இவர்கள் ஊரில் கடைத்தெருவிற்கு பொருட்கள் வாங்குவதற்கு வந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வாலிபர்களை அவர்களை ஓரமாய் போக சொல்லியுள்ளனர். அப்போது அந்த பகுதியில் வாகனங்களை வைத்திருந்த தமிழ்ச்செல்வன் (23), அகிலன் (21), அஜய் (23), தமிழழகன் (21), தினகரன் (17) ஆகியோர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகவும்,
இவர்கள் 5 பேரும் இணைந்து ஆறுமுகம், பாக்கியம், தேசன் ஆகியோரை கடுமையாகத் தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம், பாக்கியம், தேசன் ஆகிய மூவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசில் பாக்கியம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த கனகம்மாசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.