தமிழகம்

நண்பனின் மனைவிக்கு காதல் வலை.. 2வது திருமணம் செய்ய வற்புறுத்தி கொலை மிரட்டல் : கட்சி பிரமுகர் லீலை!

கோவை துடியலூர் சேரன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

சத்தியமூர்த்தியின் நண்பரான எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஹசன் பாதுஷா குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்து உள்ளார். மேலும் அவர் துடியலூர் பேருந்து நிலையத்தில் பாத்திரக்கடை வைத்து உள்ளார்.

இந்நிலையில் சத்தியமூர்த்தி வீடு வாங்க திட்டமிட்டு இருந்தது நண்பன் ஹசன் பாதுஷாவுக்கு தெரிய வந்தது. அவருக்கு நிறைய இடங்கள் தெரியும் உடனே வீடு வாங்கி தருவதாக கூறி உள்ளார்.

இந்நிலையில் சத்தியமூர்த்தி வீட்டில் இல்லாத நேரங்களில் அவரது மனைவி ஆர்த்தியுடன் சகஜமாக பேசி பழகி வந்து உள்ளார். மேலும் அவரது தொலைபேசி எண்ணையும் பெற்றுக் கொண்ட ஹசன் பாதுஷா அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி ரூபாய் 2 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டார்.

இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!

பின்னர் அவரை 2 வது திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். இது குறித்து கணவன் சத்தியமூர்த்திக்கு தெரிய வர கணவன் – மனைவி இருவரும் வாங்கிய பணத்தை திரும்பி தருமாறு கேட்டு உள்ளனர்.

அதற்குத் தர மறுத்த ஹசன் பாதுஷா தான் எஸ்.டி.பி.ஐ கட்சியில் உள்ளதாகவும், அனைத்து இடத்திலும் செல்வாக்கு உள்ளதாகவும், அவரை ஒன்றும் செய்ய முடியாது என கூறி தர மறுத்து உள்ளார்.

இது குறித்த கணவன் – மனைவி துடியலூர் உள்ள ஜமாத்தில் புகார் அளித்தனர். பின்னர் உக்கடம் பகுதியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் வைத்து பேசி பணத்தை திருப்பித் தருவதாக ஒப்புக் கொண்டு உள்ளார் ஹசன் பாதுஷா .

பின்னர் சத்தியமூர்த்தி மனைவி செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இஸ்லாம் மதத்திற்கு மாற வற்புறுத்தி உள்ளார்.

இதனால் மனமுடைந்த கணவர், மனைவியின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்திற்கு குடியேறினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை விஷயமாக சத்தியமூர்த்தி துடியலூர் பகுதிக்கு வந்து உள்ளார்.

அப்பொழுது அவரைப் பார்த்த ஹசன் பாதுஷா அவரையும் அவரது மனைவியும் பிரித்து விடுவதாகவும், கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தாக்கி உள்ளார்.

அதில் சிறிய காயம் ஏற்பட்ட சத்தியமூர்த்தி இது குறித்து மனைவி மற்றும் அவரது பெற்றோரிடம் கூறி உள்ளார். இந்நிலையில் கணவர் – மனைவிக்கு இடையே மேலும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர்.

இந்நிலையில் சத்தியமூர்த்தியின் மனைவியிடம் ஹசன் பாதுஷா கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வா இருவரும் சேர்ந்து வாழலாம் என கூறியதாகவும், தனக்கு தெரியாமல் பணத்தைப் பெற்று தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து, மனைவியை பிரித்து நடுத் தெருவில் நிறுத்திய ஹசன் பாதுஷா மீது நடவடிக்கை எடுக்க துடியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி ஹசன் பாதுஷாவை கைது செய்து, கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண். 1 ல் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

2 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

3 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

5 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

5 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

6 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

7 hours ago

This website uses cookies.