கோவை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 2303 மையங்களில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்போடு தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரி வளாகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் இயந்திரங்கள் பத்திரமாக முகவர்கள் முன்னிலையில் அடுக்கி வைக்கப்பட்டது. கோவை மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளர் நாகராஜன், தேர்தல் பார்வையாளர் கோவிந்தராவ், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா ஆகியோர் வாக்கு எண்ணிக்கை மையத்தை நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களை அரசியல்கட்சி, சுயட்சை உள்ளிட்ட முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்தனர்.
இதேபோல் மதுக்கரை தொண்டாமுத்தூர் மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு வைக்கப்பட்டது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.