கோவை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 2303 மையங்களில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்போடு தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரி வளாகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் இயந்திரங்கள் பத்திரமாக முகவர்கள் முன்னிலையில் அடுக்கி வைக்கப்பட்டது. கோவை மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளர் நாகராஜன், தேர்தல் பார்வையாளர் கோவிந்தராவ், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்காரா ஆகியோர் வாக்கு எண்ணிக்கை மையத்தை நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களை அரசியல்கட்சி, சுயட்சை உள்ளிட்ட முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்தனர்.
இதேபோல் மதுக்கரை தொண்டாமுத்தூர் மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு வைக்கப்பட்டது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.