தமிழகம்

’காருக்கு இருக்கும் மதிப்பு என் மகனுக்கு இல்லையா?’.. 9 மணிநேரமாக திக் திக்.. கதறும் தாய்!

சென்னை துறைமுகத்தில் ரிவர்ஸ் எடுத்தபோது கார் கவிழ்ந்து கடலுக்குள் விழுந்த நிலையில், 9 மணிநேரமாக ஓட்டுநரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்த கடலோர காவல்படை வீரர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் கார் ஒன்று இன்று அதிகாலை அங்கு வந்துள்ளது. இந்தக் காரை கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது சகி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில், துறைமுகத்தில் கடலோர காவல் படை வீரரை ஏற்றிக்கொண்டு, ஓட்டுநர் முகமது சகி காரை ரிவர்ஸ் எடுத்துள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நிலை தடுமாறி கடலுக்குள் பாய்ந்து உள்ளது. அப்போது, உடனடியாக காரின் கதவை உடைத்து கடலோர காவல் படை வீரர் தப்பி உள்ளார்.

ஆனால், கடலில் இருந்து வெளியே வந்த காவல் படை வீரர், அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார். இதனையடுத்து, அங்கு இருந்த சக கடலோர காவல் படை வீரர்கள், மயங்கிய வீரரை மீட்டு, உடனடியாக ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம், கடலில் மூழ்கிய கார் ஓட்டுநர் முகமதி சகியை மீட்கும் பணியும் தொடங்கியது. இந்தப் பணியில் 30க்கும் மேற்பட்ட கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும், கிரேன் மூலம் கார் மீட்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ‘அவர உனக்கு தெரியாதா?’.. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. நடந்து வந்தவருக்கு அரிவாள் வெட்டு.. நெல்லையில் பயங்கரம்!

ஆனல், கார் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், 9 மணி நேரமாக ஓட்டுநரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டுநர் முகமது சகியின் தாய் உள்பட உறவினர்கள், மீட்புப்பணி குறித்து போலீசார் உரிய பதில் அளிக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

10 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

12 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

12 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

12 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

13 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

14 hours ago

This website uses cookies.