Categories: தமிழகம்

கசந்து போன காதல் திருமணம்… நகை, பணத்தை ஏப்பம் விட்டு இரண்டாவது திருமணம் செய்த காவலர் : முதல் மனைவி பரபரப்பு புகார்!!!

தருமபுரி : வரதட்சணை கேட்டு முதல் மனைவியை அடித்து விரட்டி விட்டு விட்டு இரண்டாவது திருமணம் செய்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல் மனைவி புகார் அளித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் சோலை கொட்டாய் அருகே உள்ள ஜம்புகாலன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நிவேதா (வயது 24) பட்டதாரியான இவர் கம்பைநல்லூர் அருகே உள்ள குமாரம்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

விக்னேஷ் டெல்லி திகார் சிறையில் எட்டாவது பட்டாலியனில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருமணம் செய்யும் பொழுது எந்தவித எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை வரதட்சணை என்பது தேவையில்லை என்று ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் திருமணம் நடந்த பின்பு விக்னேஷ்சின் தாயார் என் மகன் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார் என்பதால் 50 சவரன் நகை வரதட்சணையாக தரவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.

அதனையடுத்து வேறு வழியில்லாமல் நிவேதாவின் குடும்பத்தினர் நிவேதாவிற்கு 30 சவரன் மாப்பிள்ளை விக்னேஷ்க்கு 3 சவரன் நகையும் கொடுத்து ரூபாய் 50 ஆயிரம் கொடுத்துள்ளனர். மேலும் கார் வாங்கி கொடுக்க வேண்டும் என்றும், விக்னேஷ்சின் தாய் தந்தை மற்றும் தங்கை இவர்களின் பேச்சை கேட்டு அடிக்கடி பணம் கொடுக்க வேண்டும் என்று தொந்தரவு செய்ததோடு மட்டுமல்லாமல் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் நிவேதா மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதால் மருத்துமனைக்கு கொண்டு சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றியுள்ளனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் விக்னேஷ் மற்றும் அவர்கள் குடும்பத்தார் மீது இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் விக்னேஷ் காவலராக பணிபுரிந்து வருவதால் காவல் நிலையங்களில் பேசி முடித்து விடுவதாகக் கூறினார்.

இதனை தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வருவதால் வேறு வழியின்றி வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி எனது கணவரின் குடும்பத்தார் சேர்ந்து எனது கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனால் தற்போது என்னுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாக உள்ளதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னை என் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்களிடம் நிவேதா புகார் மனுவை அளித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

13 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

13 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

14 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

14 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

15 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

15 hours ago

This website uses cookies.