தீபாவளிக்காக ரகசிய வசூல் வேட்டை.. தனி அறை அமைத்து ரூ.9 லட்சம் பணம் பதுக்கல் : சிக்கிய அரசு அதிகாரி!!
திருச்சி மாவட்ட வேளாண் விற்பனை குழு அலுவலகம் திருச்சி மதுரை மெயின் ரோட்டில் தலைமை இடம் கொண்டு செயல்படுகிறது.
இதன் செயலாளராக சுரேஷ் பாபு பதவி வகித்து வருகிறார். மேலும், திருப்பூர் மாவட்டத்திற்கும் முதல்நிலை செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்தும் வருகிறார்.
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 14ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 15 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் இவருடைய கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விற்பனையாளர்களிடம் இருந்து சுரேஷ்பாபு தீபாவளி வசூல் செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி ரகசிய தகவலின் பேரில், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் துணை வட்டாட்சியர் பிரேம்குமார், மற்றும் குழுவினருடன் திருச்சி மதுரை சாலையில் உள்ள திருச்சி விற்பனை குழு அலுவலகத்தில் மதியம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சுரேஷ் பாபு இடமிருந்து கணக்கில் வராத 90ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும், அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சுரேஷ்பாபு விற்பனையாளர்களிடமிருந்து வசூல் செய்த பணத்தை கிராப்பட்டியில் தங்கி உள்ள அறையில் வைத்திருப்பதாக அளித்த தகவலின் பேரில் அறையை சோதனை செய்த போது அங்கும் கணக்கில் வராத 8 லட்சத்து 80ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
மொத்தம் அவரிடமிருந்து 9லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் அவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.