தீபாவளிக்காக ரகசிய வசூல் வேட்டை.. தனி அறை அமைத்து ரூ.9 லட்சம் பணம் பதுக்கல் : சிக்கிய அரசு அதிகாரி!!
திருச்சி மாவட்ட வேளாண் விற்பனை குழு அலுவலகம் திருச்சி மதுரை மெயின் ரோட்டில் தலைமை இடம் கொண்டு செயல்படுகிறது.
இதன் செயலாளராக சுரேஷ் பாபு பதவி வகித்து வருகிறார். மேலும், திருப்பூர் மாவட்டத்திற்கும் முதல்நிலை செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்தும் வருகிறார்.
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 14ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 15 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் இவருடைய கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விற்பனையாளர்களிடம் இருந்து சுரேஷ்பாபு தீபாவளி வசூல் செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி ரகசிய தகவலின் பேரில், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் துணை வட்டாட்சியர் பிரேம்குமார், மற்றும் குழுவினருடன் திருச்சி மதுரை சாலையில் உள்ள திருச்சி விற்பனை குழு அலுவலகத்தில் மதியம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சுரேஷ் பாபு இடமிருந்து கணக்கில் வராத 90ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும், அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சுரேஷ்பாபு விற்பனையாளர்களிடமிருந்து வசூல் செய்த பணத்தை கிராப்பட்டியில் தங்கி உள்ள அறையில் வைத்திருப்பதாக அளித்த தகவலின் பேரில் அறையை சோதனை செய்த போது அங்கும் கணக்கில் வராத 8 லட்சத்து 80ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
மொத்தம் அவரிடமிருந்து 9லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் அவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
This website uses cookies.