திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பி.கே.அகரம் கிராமத்தை சேர்ந்தர் சண்முக சுந்தரம் (60). இவர் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில செயலாளராக பதவி வைத்து வருகிறார்.
இவர் தற்போது எம்.ஆர். பாளையம் கிழக்கு காலணி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவரது மனைவி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இவருக்கு இவரது உறவினர் வீட்டில் இருந்து தினமும் உணவு வந்து கொடுத்து வந்துள்ளனர் .நேற்றிரவு உணவு கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை அங்கு வந்த மர்ம கும்பல் சண்முகசுந்தரத்தை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
இன்று காலை வழக்கம் போல் உணவு கொடுக்க வந்தபோது சண்முகசுந்தரம் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் மற்றும் சிறுகனூர் போலீசார் கொலை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் சம்பவத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வீட்டைச் சுற்றி குறைத்தபடி வந்து சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.