தமிழகம்

அண்ணாமலையை குறைத்து மதிப்பிடக் கூடாது.. சீமான் சொன்ன சீக்ரெட்!

அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிட முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

திருச்சி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (டிச.29) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “35 வருட கட்சியான பாமகவில் நேற்றைய பிரச்னை சரியாகிவிடும். வார்த்தை மோதல் குறித்து நான் கருத்துக் கூற முடியாது.

அன்புமணிக்கு கூட தலைவர் பதவியை நம்பிக்கையின் அடிப்படையில் தான் ராமதாஸ் வழங்கி இருப்பார். எதற்குமே நிதியில்லை எனக் கூறி வரும் திமுக அரசுக்கு, மகளிர் உரிமைத் தொகை வழங்க மட்டும் நிதி இருக்கிறதா? மழை நீர் செல்ல இடமில்லை, ஏதற்கு 62 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மெட்ரோ?

கமிஷன் வாங்குபவர்களைத் தேர்வு செய்து விட்டு, தலைவர்களைத் தேர்வு செய்யாமல் எப்படி அவர் மக்களுக்கு செலவு செய்வார்? அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் FIR மட்டும் எப்படி வெளியானது?

இது வன்கொடுமையை விட மிகவும் கொடூரமானது. போலீசார் முறையாக செயல்பட்டிருந்தால் நீதிமன்றம் ஏன் கண்டிக்கப் போகின்றது? பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்பதை எப்படி நம்புவது?” என்றார்.

இதனையடுத்து, திமுக அரசைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான், “தனது கோபத்தை சாட்டையால் அடித்து வெளிப்படுத்திய அண்ணாமலையை நான் விமர்சிக்க முடியாது. அவரது கோபத்தை குறைத்து மதிப்பிட முடியாது.

இதையும் படிங்க: வாழப்பழத்த ஊட்ட முடியாது.. ரசிகர்களை சீண்டி பார்த்த பாலா!

எனக்குகூட தான் கோபம் இருக்கிறது. குற்றவாளியைத்தான் சாட்டையால் அடிக்க வேண்டுமே தவிர, நம்மை எதற்கு சாட்டையால் அடித்துக் கொள்ள வேண்டும். இதனைக் கேட்கும் போது கஷ்டமாக இருந்தது. அவருடைய உணர்வை அவர் வெளிப்படுத்தி உள்ளார். செருப்பு அணிய மாட்டேன் என்றெல்லாம் அண்ணாமலைக் கூறியதை ஏற்க முடியாது.

தம்பியிடம் (அண்ணாமலை) இந்தக் களத்தில் ஒரு அண்ணண் என்ற முறையில் நான் சொல்வது, இந்த நாட்டில் நிறைய மாறுதல்களைச் செய்ய வேண்டும். அதைத் தான், நான் அடிப்படை அரசியல் மாற்றம் என்று சொல்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Hariharasudhan R

Recent Posts

2 முறை கருக்கலைப்பு.. திருமணத்திற்கு வற்புறுத்திய இளம்பெண் : நடுக்காட்டில் பயங்கரம்!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…

14 minutes ago

எங்க பாட்டுதானே ஜெயிக்க வைக்குது; காசு கொடுத்தா என்ன? – கண்டபடி கேட்ட கங்கை அமரன்

5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…

1 hour ago

திமுக அலுவலகத்தில் மேல் தளத்தில் ரெய்டு.. கீழ் தளத்தில் பேக்கரி டீலிங் ; இபிஎஸ் பதிலடி!

இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…

2 hours ago

திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி

டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…

3 hours ago

பேக்கரி டீலிங்… நீட் தேர்வு குறித்து காரசாரம் : அமைச்சருக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!

நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…

3 hours ago

விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!

அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து  கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…

4 hours ago

This website uses cookies.