தமிழகம்

’நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?’ திடீரென ஆவேசமான சீமான்!

புத்தக வெளியீட்டு விழாவில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என சீமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம்: நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில், ‘தமிழ்த்தேசியம்’ எனும் நூலை வெளியிட, சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது, புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதனையடுத்து, இதற்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.

எனவே, இந்த விவகாரம் குறித்து நாதக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என புத்தகக் கண்காட்சி நடத்தும் பபாசி தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று (ஜன.06) சேலத்தில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இது குறித்து பேசிய அவர், “பபாசி என்பது அரசு சார்ந்தது அல்ல, எங்கள் கட்சி நிகழ்ச்சிகளில் வேறு தமிழ்த்தாய் வாழ்த்து தான் பயன்படுத்துவோம்.

தமிழ்நாட்டில் எங்கு திராவிட நல் திருநாடு இருக்கிறது? தமிழ்த்தாய் வாழ்த்தில் 10க்கும் மேற்பட்ட வரிகளை நீங்கள் (திமுக) எடுத்துவிட்டீர்கள். நான் பாடலையே எடுத்துவிட்டேன். திராவிட நல் திருநாடு என்பது ஏன் இங்கு வருகிறது? திராவிடம் என்பது என்ன மொழி? தமிழ்த்தாய் வாழ்த்தில் சமஸ்கிருதச் சொல் வருகிறதா, இல்லையா?

உங்கள் வசதிக்கு அதில் திராவிடம் என வந்ததும், அதனை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஆக்கிவிட்டீர்கள். நான் அதிகாரத்திற்கு வந்ததும், புரட்சிப் பாவலர் எழுதிய பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன். மேடையில் நான் இறங்கிய பிறகு ‘கலைஞர் கின்னஸ்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க: தலைக்கேறிய போதையில் தள்ளாடி வந்த பிரபல கிரிக்கெட் வீரர்…வேதனையில் ரசிகர்கள்..!

அதில், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். அதில் அவர்களும் அரசியல் தான் பேசினர். ஆனால், நான் பேசியது மட்டும் தான் இவர்களுக்கு பிரச்னை. நான் பேசி இந்த அளவுக்குக் கூட பிரச்னையாகவில்லை என்றால், நான் எதற்கு அரை நாள் செலவழித்துச் சென்று பேச வேண்டும்?

தமிழ்த்தேசியம் என்னும் புத்தக வெளியீட்டில், அதனை முன்னெடுக்கும் நான் தமிழ்த்தேசியத்தை பற்றித்தான் பேச முடியும். இப்படி நடக்கும் என்று தெரிந்து தான் அந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அனைவரும் அரசியல் தான் பேசுகின்றனர். ஆனால், அதில் நான் பேசியது தான் உங்களுக்கு பிரச்னையாக இருக்கிறது. மன்னிப்பு கேட்கிற ஆளா நான்? உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து போட்டதற்கு நீங்கள் அனைவரும் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Hariharasudhan R

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

12 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

13 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

13 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

14 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

14 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

14 hours ago

This website uses cookies.