தமிழகம்

இது களையுதிர் காலம்.. எந்தக் கட்சியிலும் சேரவில்லையா? காளியம்மாள் களம் எப்படி?

நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது நாதகவுக்கு களையுதிர் காலம் என சீமான் கூறியுள்ளார்.

மதுரை: நாகப்பட்டினத்தில் அடுத்த மாத, உறவுகள் சங்கமம் என்ற நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் வாழ்த்துரை வழங்க உள்ளார். இதனிடையே, இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் காளியம்மாளின் பெயருக்கு கீழ் சமூக செயற்பாட்டாளர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அவர் தற்போது நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். ஆனால், கட்சிப் பொறுப்பை அழைப்பிதழில் குறிப்பிடாததால், அவர் கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுதொடர்பான அறிவிப்பை காளியம்மாள் இன்று வெளியிடுவார் என அவரே தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு கூறியுள்ளார்.

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், காளியம்மாள் விலகல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், “இலையுதிர் காலம் போன்று எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம். யார் வேண்டுமானாலும் கட்சியிலிருந்து செல்லலாம். அது அவர்களின் தனிப்பட்ட முடிவு.

கட்சியில் இருப்பதற்கும், விலகுவதற்கும் காளியாம்மாளுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. காளியம்மாள் விலகினால் விலகட்டும், அவருக்கு வாழ்த்துகள். பக்கத்தில நிற்பவர் கூட நாளை வேறு ஒரு அமைப்புக்குப் போகலாம். வரும்போது வாங்க வாங்க, வணக்கம் என்போம். போகும்போது போங்க, ரொம்ப நன்றி, வாழ்த்துக்கள் எனச் சொல்வோம். இது எங்களுடைய கொள்கை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தி மட்டும்தான் தெரியும்.. சூப்பில் மிதந்த பூச்சி.. கோவை ஹோட்டலில் பரபரப்பு!

இந்த நிலையில், ஒருவேளை காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினால், அடுத்ததாக திமுகவிலோ அல்லது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திலோ இணையலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கட்சியில் இருந்து விலகி சில காலங்களுக்கு சமூக செயற்பாட்டாளராகவே காளியம்மாள் பயணிக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hariharasudhan R

Recent Posts

என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!

சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…

21 minutes ago

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

14 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

15 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

15 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

16 hours ago

This website uses cookies.