யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல என நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான் பதிலளித்துள்ளார்.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில், இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தித் திணிப்பிற்கு எதிராக திமுக போராட்டம் நடத்தவில்லை, நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது. 60 வருடமாக நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது. கட்டாய இந்தித் திணிப்பில் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? என்னை மீறி முடிந்தால் இந்தி மொழியைத் திணித்துக் காட்டுங்கள். நாம் தமிழர் கட்சியில் நிர்வாகிகள் நீடிப்பது, வெளியேறுவதும் அவரவரதுச் சொந்த விருப்பம். இது ஒரு ஜனநாயக இயக்கம்.
விரும்பியவர்கள் கட்சிக்கு வருவார்கள், போவர்கள், இது குறித்து பேசிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு செய்தியாக, ஒவ்வொரு முறையும் கேட்கிறீர்கள். நான் பதில் சொல்ல வேண்டியதிருக்கிறது, அதை விடுங்கள், இது என் கட்சி பிரச்னை.
கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் கட்சியில் பயணிப்பார்கள். வேறு ஒரு காரணம் இருக்கிறது என நினைத்தால் வெளியேறுவார்கள். யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல. அதை விட்டுவிடுங்கள். முரண்பாடு உள்ளவர்கள் வெளியேறுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மக்களவைத் தொகுதி குறைப்பா? ஸ்டாலின் அழைப்பு.. அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு என்ன?
முன்னதாக, இன்று காலை நாதக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நேற்று, நாதக மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், சமீப காலமாகவே சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நிர்வாகிகள் விலகி வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
This website uses cookies.