நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார்.
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011ஆம் ஆண்டில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், இதனை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து, முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அன்றைய நாள் நேரில் ஆஜராக முடியாது, 4 வாரகாலம் அவகாசம் வேண்டும் என வழக்கறிஞர் மூலம் சீமான் மனு அளித்தார்.
இதனையடுத்து, நேற்று (பிப்.28) காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என 2வது முறையாக போலீசார் சம்மன் வழங்கினர். குறிப்பாக, இந்த சம்மன் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டு நுழைவாயில் கதவில் ஒட்டப்பட்டது. ஆனால், அதை சீமானின் உதவியாளர் கிழித்தார். இதனால், வீடுபுகுந்து நீலாங்கரை போலீசார் அவரைக் கைது செய்ய முயன்றனர்.
அப்போது, பாதுகாவலருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, சீமானின் பாதுகாவலர், காவலாளி இருவரையும் நீலாங்கரை போலீசார் கைது செய்து இரவோடு, இரவாக சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், நேற்று விசாரணைக்கு ஆஜராவதற்கு வடபழனி ஓட்டலில் தங்கியிருந்த சீமான், அங்கிருந்து புறப்பட்டு ஏவிஎம் ஸ்டுடியோ அருகில் சென்று கொண்டிருந்தார்.
தாமதமாக வரச்சொன்ன போலீஸ்: அப்போது, அவரைத் தொடர்பு கொண்ட போலீசார் இரவு 9.15 மணியளவில் வாருங்கள் எனத் தெரிவித்தனர். எனவே, ஏவிஎம் ஸ்டுடியோ அருகிலேயே காத்திருந்த சீமான், பின்னர் இரவு 9.15 மணியளவில் புறப்பட்டு நெரிசல் காரணமாக 10 மணியளவில் காவல் நிலையம் சென்றடைந்தார்.
அப்போது, சீமானிடம் கேட்பதற்காக சுமார் 100 கேள்விகள் அடங்கிய பட்டியலை போலீசார் தயார் செய்து வைத்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக, விஜயலட்சுமிக்கும், உங்களுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது, அவரை நீங்கள் மாலை மாற்றித் திருமணம் செய்தது உண்மையா, கருக்கலைப்பு செய்தது உண்மையா, புகாரை திரும்பப் பெற அழுத்தம் கொடுத்தீர்களா, பண உதவி செய்தீர்களா என்பன உட்பட பல்வேறு கேள்விகளை போலீசார் கேட்டுள்ளனர்.
அதற்கு சீமான் அளித்த பதில்களை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்துள்ளனர். மேலும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இது சுமார் 75 நிமிடங்கள் நீடித்தது. இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “போலீஸ் விசாரணையில் சென்ற முறை கேட்ட அதே பழைய கேள்விகளையே இந்த முறையும் கேட்டனர். புதிய கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை.
விசாரணைக்கு தாமதமாக வர, காவல்துறையினரே காரணம். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். விசாரணைக்கு மீண்டும் தேவைப்பட்டால் ஆஜராகத் தயார். போலீஸ் விசாரணையில் என்னை நல்ல முறையிலே நடத்தினர்.
இந்த வழக்கை விசாரித்து முடிக்க மூன்று மாதம் கால அவகாசம் உள்ளது. மூன்றே நாளில் இதை விரைந்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனக்கு சம்மன் கிடைத்தபோது நான் பயணத்தில் உள்ளதாகத் தெரிவித்தேன். மீண்டும் கொடுத்த சம்மனை அடுத்து, போலீஸ் விசாரணைக்கு ஆஜரானேன்.
போலீஸ் தரப்புக்கு இந்த வழக்கில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆளும் திமுக அரசு இந்த வழக்கை நீட்டித்துக் கொண்டே செல்கிறது. என் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மனை அகற்றியதில் எந்த தவறும் இல்லை. எங்கள் வீட்டில் இருந்த இருவரைக் கைது செய்ததும், அவர்களைத் தாக்கியதும்தான் தவறு.
சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் போலீஸ் அதிகாரிகள். அப்படி இருக்கும்போது நீலாங்கரை போலீசார் ஏன் எங்கள் வீட்டில் இருந்தவர்களைக் கைது செய்ய வேண்டும். கருணாநிதி என்னைக் கைது செய்து தலைவர் ஆக்கினார். இப்போது இவர்கள் என்னைக் கைது செய்து முதல்வராக்க உள்ளனர்.
இதையும் படிங்க: இதெல்லாம் மக்களுடன் ஒட்டவே ஒட்டாது… விஜய்யை ‘அது’ என ஒருமையில் பேசிய பிரபலம்..!
கடந்த தேர்தலில் தனித்து நின்று அடையாளம் பெற்றோம். எங்களுக்கு 36 லட்சம் வாக்குகள் கிடைத்தன. வாக்குக்கு பணம் கொடுக்காமல் இதைப் பெற்றுள்ளோம். என் மீதுள்ள நற்பெயரைச் சிதைக்கும் வகையில் அரசு இதனைச் செய்துள்ளது. புகார் அளித்த நடிகை கடந்த 15 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்தி வருகிறார்.
விரும்பி வந்து அவர் உறவு வைத்துக்கொண்டார். எனக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. குழந்தைகள், குடும்பம் ஆகிவிட்டது. என் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டதா?அரசியல் களத்தில் நான் ஒரு பக்கமும், விஜய் ஒரு பக்கமும் உள்ளார். என்றைக்கும் அவர் எனது அன்புத் தம்பிதான். முதல்வர் அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…
உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம் என சரத்குமார் கூறியுள்ளார். பெரம்பலூர்:…
படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 2015ல் வேல்ராஜ் இயக்கத்தில்…
This website uses cookies.