தமிழகம்

’இதுக்கு’தான் ஐபிஎஸ் ஆனாரா வருண்குமார்?.. சீமான் ஆவேசம்!

உண்மையான தமிழ் தாய், தந்தைக்கு பிறந்திருந்தால் இப்படி அவர் (வருண்குமார் ஐபிஎஸ்) பேச மாட்டார் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வருண்குமார் ஐபிஎஸ் நீண்ட நாள்களாக என்னை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார். புதிதாக அவர் எதுவும் சொல்லவில்லை.‌

நாங்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக கட்சி நடத்தி வருகிறோம். அது மட்டுமின்றி, தேர்தலில் நின்று கிட்டத்தட்ட 36 லட்சம் வாக்குகளைப் பெற்று, தமிழ்நாட்டின் மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக இருக்கிறோம். இவர் நாட்டை ஆள்கிறாரா? எதனை வைத்து பிரிவினைவாதிகள் என்று சொல்கிறார்?

அடிப்படை தகுதிகள் இல்லாமல் அவர் எப்படி ஐபிஎஸ் ஆனார்? தமிழ் – தமிழர் என்பது பிரிவினைவாதமா? உன் தாய்மொழி எது? உண்மையான தமிழ் தாய், தந்தைக்கு பிறந்திருந்தால் இப்படி அவர் பேச மாட்டார். உனக்கு மட்டும் தான் மனைவி, குழந்தை உள்ளதா? பேசும்போது பார்த்து பேச வேண்டும்.

அந்த மாநாட்டில் இவர் (வருண்குமார் ஐபிஎஸ்) பேசியது மட்டும் எப்படி வெளியே வருகிறது? இதுதான் உன்னுடைய வேலையா? என் கட்சியை குறை சொல்லத்தான் ஐபிஎஸ் ஆனாரா? காக்கி உடையில் இன்னும் எவ்வளவு காலம் இருக்க முடியும்? மோதுவது என்று முடிவாகிவிட்டது, மோதலாம்” என்றார்.

இதையும் படிங்க: விசாரணை என்ற பெயரில் நிர்வாணத் தாக்குதல்.. 2 கிட்னியும் செயலிழப்பு.. கோவையில் பரபரப்பு!

தொடர்ந்து தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய சீமான், “விஜய் மக்களுக்கு உதவ நினைப்பதை குறை சொல்ல முடியாது. எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருக்க நாங்கள் மன நோயாளி அல்ல. சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு. எந்தப் புயல் பாதிப்புக்கும் மத்திய அரசு உதவி செய்யவில்லை.

மாநிலங்கள் தரும் வரியை எடுத்து வைத்துவிட்டு, பேரிடர் காலங்களில் கூட மத்திய அரசு உதவுவது இல்லை. இதைக் கேள்வி கேட்டால் ஆன்டி இந்தியன் என்கின்றனர்” எனக் கூறினார்.

முன்னதாக, சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் மாநாட்டில் பங்கேற்ற திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ், “நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம். நாம் தமிழர் கட்சியால் நானும், என்னுடைய குடும்பத்தினரும் இணையதளக் குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இணையக் குற்றம் செய்யும் கூலிகளைக் கண்காணிக்க 14 சி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

9 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

10 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

11 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

12 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

12 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

13 hours ago

This website uses cookies.