திராவிடச் சித்தாந்தம் என்ற பேராபத்திற்கு எதிரான அரசியலை முன்னெடுத்துள்ளேன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, பவானி சாலையில் நேற்று இரவு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய சீமான், “திமுகவை அகற்றாமல் தமிழகத்திற்கு விடிவில்லை. தமிழகத்திற்கு நல்லாட்சியும் கிடைக்காது. திராவிடம் தளர்ச்சி அடையும்போது தமிழ்த் தேசியம் எழுச்சி பெறுகிறது. திராவிடத்தின் குறியீடாக உள்ள பெரியாா் ஈவெராவை எதிர்க்க தமிழ் தேசியத்தின் அடையாளமாக உள்ள பிரபாகரன் பின்னால் நாங்கள் நிற்கிறோம்.
பெரியார் ஈவெராவை எதிர்ப்பது என்பது மதவாத சக்திகளுக்கு உதவியாகப் போய்விடும் என்ச் சொல்கின்றனர். ஆனால், தொல்காப்பியன், திருவள்ளுவர், கம்பரை ஆரிய அடிமை என பெரியார் ஈவெரா கூறுகிறார். பெரியார் ஈவெராவையும், திராவிடத்தையும் எதிர்த்தால், உடனே பாஜகவின் கைக்கூலி எனச் சொல்லிவிடுகின்றனர்.
எந்த வகையில் அநீதி நடந்தாலும், அதனை எதிா்க்கும் தமிழனின் மரபணு என்னிடம் உள்ளது. தமிழகத்திற்கு பேராபத்தான அரசியலை நான் முன்னெடுப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார். நான் திராவிடச் சித்தாந்தம் என்ற பேராபத்திற்கு எதிரான அரசியலை முன்னெடுத்துள்ளேன்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: வலதுசாரி அரசியல் நாடகம்.. சீமான் பாஜகவின் கொ.ப.செ? – திருமாவளவன் கேள்வி!
மேலும், இந்தக் கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் மாலை 05.30 முதல் 06.30 மணி வரை அனுமதி கேட்டுள்ளனர். இதற்கான அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மாலை 06.30 மணிக்கு தொடங்கிய பரப்புரை, இரவு 09.15 மணிக்கே நிறைவடைந்துள்ளது. இதனால் தேர்தல் விதிகளை மீறி அனுமதி வழங்கிய நேரத்தை விட கூடுதல் நேரம் பரபரப்பு மேற்கொண்டதாக, பறக்கும்படை அதிகாரி நவீன், கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சீமான் உள்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
This website uses cookies.