வருண்குமார் ஐபிஎஸ், சீமான் குறித்த கேள்விக்கு மைக் புலிகேசிக்கு எல்லாம் ரியாக்ட் செய்ய விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மதுரை: ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக வருண்குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில், இன்று சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த முறை நீதிபதி கூறியிருந்தார்.
ஆனால், சீமான் அந்த நோட்டீசை பெற்றுக் கொள்ளவில்லை. மேலும், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனிடையே, இன்று இவ்வழக்கின் விசாரணைக்காக மத்திய மண்டல காவல்துறை துணைத் தலைவர் வருண்குமார் ஐபிஎஸ் ஆஜரானார். அப்போது, சீமான் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “மைக் புலிகேசிக்கு எல்லாம் ரியாக்ட் பண்ண விரும்பவில்லை. இது குறித்து வழக்கறிஞர் கூறுவார்” எனக் கூறிவிட்டுச் சென்றார். இந்த நிலையில், வருண்குமார் ஐபிஎஸ் மைக் புலிகேசி எனக் குறிப்பிட்டது குறித்து, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சீமான், “வருண்குமார் ஐபிஎஸ் என்னைச் சீண்டியதால் தான் அவர் அங்கு உள்ளார். ஒரு போலீஸ் அதிகாரி போலீஸ் வேலையைத்தான் பார்க்க வேண்டும். கட்சிக்காரர் போல் பேசி வருகிறார். தேவையில்லாமல் சீண்டினால் வெறிதான் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக தோல்வி.. அமைச்சர் பதவி விலகுக.. அண்ணாமலை காட்டம்!
மேலும், வருண்குமாரின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், “இன்று நீதிமன்றத்தில் காவல்துறை மண்டல துணைத் தலைவராக இருக்கக்கூடிய டிஜஜி வருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். சீமானுக்கு நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அவர் பெற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, வருகிற ஏப்ரல் 7 அன்று சீமான் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்றால், நீதிமன்றம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும், பிடிவாரண்ட் கூட கொடுக்கலாம்” எனத் தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.