திருவள்ளூர் : திருவள்ளூரில் கார் மூலம் கடத்தி கொண்டு வரப்பட்ட 110 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையான பொன்னியம்மன் பட்டறை செக் போஸ்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.
அதில் சுமார் 50 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதேபோல் திருவள்ளூர் காக்கலூர் இடைமடை பகுதியில் நடத்திய வாகன சோதனையில், மற்றொரு காரை சோதனையிட்ட போது, அதிலும் இரு பைகளில் சுமார் 60 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடத்தி வரப்பட்ட 110 கிலோ கஞ்சாவையும், பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த நிலமலை, ரமேஷ் மற்றும் உமா ஷங்கர் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
This website uses cookies.