புதுச்சேரி: தமிழகத்திற்கு மதுபாட்டில்கள் கடத்த முயன்ற 4 பெண்களை போலீசார் கைது செய்து 446 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து உருளையன்பேட்டை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பெண்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்து இருந்த பைகளை சோதனையிட்டதில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திண்டிவனம் கிடங்கல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வள்ளி (வயது 40), விஜயா (50), செல்வி (50), கல்பனா (34) என்பதும் தெரியவந்தது.
மேலும், புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி, கடத்திச் சென்று தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 446 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, கலால் துறையில் ஒப்படைத்தனர்
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.