விழுப்புரம் : வறுமையின் காரணமாக அண்ணன், தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் வில்லியம் லே அவுட் 2-ஆவது தெருவை சேர்ந்தவர் சுசீந்திரன் (வயது 54). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தங்கை பிரமிளா (வயது 50). இவர் நடிகை ஊர்வசியின் தம்பி கமல் என்பவரை திருமணம் செய்து சென்னையில் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரமிளா தனது கணவரை பிரிந்து விழுப்புரத்தில் உள்ள தனது அண்ணன் சுசீந்திரனுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தார்.
இதனிடையே கொரோனா பரவல் காரணமாக சுசீந்திரனுக்கு வேலையில்லாததால் அவர்கள் இருவரும் வறுமையில் தவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று இவர்கள் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியதை அக்கம்பக்கத்தில் உணர்ந்தனர்.
இது குறித்து விழுப்புரம் நகர போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து விழுப்புரம் நகர போலீஸார் விரைந்து சென்று கதவை உடைத்து பார்த்தனர்.
அங்கு சுசீந்திரன், பிரமிளா ஆகியோர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தனர். இறந்து ஒரு வாரம் இருக்கும் என்பதால் உடல்கள் சிதைத்த நிலையில் காணப்பட்டது. மேலும் அவர்கள் தற்கொலை செய்வதற்கு முன்பாக ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தனர்.
அதில் எங்கள் இருவரின் தற்கொலைக்கும் யாரும் காரணமல்ல எங்களின் வறுமை காரணமாகவே தற்கொலை செய்து கொள்கிறோம் என்றும் வீட்டில் உள்ள பொருட்களை விற்று காரியங்களை செய்ய வேண்டுமென எழுதி வைத்துள்ளனர்.
கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் இருவரின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விழுப்புரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் வறுமை காரணமாக அண்ணன் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.