கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் சுப்பையர் குளம் உள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது.
இந்த குளத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை எடுத்து மாநகராட்சி அந்த குளத்தை தூர்வார 47 லட்ச ரூபாய் அனுமதித்தது.
இந்நிலையில் இதனை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் ஜெகன் குளத்தை தூர் வருவதற்கு பதிலாக சுமார் 8 அடி ஆழம் தோண்டி 1 மாதத்தில் சுமார் 10 லட்சம் மெட்ரிக் டன் மண்ணை எடுத்து அதனை 84 லட்ச ரூபாய்க்கு விற்று உள்ளதாகவும், மாநகராட்சி ஒப்பந்தத்தை மீறி குளத்தில் மண் எடுத்து விற்பனை செய்த ஒப்பந்ததாரர் ஜெகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாநகராட்சியின் தெற்கு மண்டல தலைவர் முத்துராமன் தலைமையில் சுனில், ரமேஷ், தினகரன்,ரோசிட்டா திருமால், ஆச்சியம்மாள் உள்ளிட்ட பா.ஜ.க கவுன்சிலர்கள் இன்று ஆணையர் ஆனந்த் மோகனிடம் புகார் மனு அளித்தனர்.
ஒப்பந்ததாரர் ஜெகன் மீது மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கா விடில் இரண்டு நாட்களில் பாஜக சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.