கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டி சாலையில் கட்டிட அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு அதில் நவீன பார் செயல்பட்டு வருகிறது. இது திமுக பிரமுகருக்கு சொந்தமான கட்டிடம் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் அனுமதித்த நேரத்தை விட அதிக அளவில் மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் முகப்பில் ரெஸ்டாரன்ட் என விளம்பர பதாகை வைத்துவிட்டு உள்ளே பார் வசதியுடன் மது விற்பனை நடைபெற்று வருவதாக கூறி இப்பகுதி உள்ள பாஜகவை சேர்ந்த பெண்கள் தனியாருக்கு சொந்தமான அந்த மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அந்த பாறை மூட வேண்டும் எனவும் கட்டிட அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் உடனடியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல்துறை பெண் துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலி மதுபானம் விற்பனை செய்வதாக தெரிவித்த நிலையில் டிஎஸ்பி திடீர் ஆய்வை மேற்கொண்டார் பின்னர் இது குறித்து விசாரணை நடத்த போவதாகவும் மதுபான விற்பனை உரிமம் இல்லாமல் நடைபெற்றால் நடவடிக்கை எடுக்கப் போவதாகும் தெரிவித்தார்.
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…
This website uses cookies.