தமிழகம்

ஆட்சியர் பலிகடாவா? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவை வெளுத்து வாங்கிய செல்லூர் ராஜு!

அதிமுக மீது வேண்டும் என்றே பழியைப் போட்டு திமுக உள்நோக்குடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை: மதுரை மாவட்டத்தின் முக்கிய அதிமுக நிர்வாகிகளான ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தரப்பில் தயார் செய்யப்பட்ட ஒருங்கிணைந்த அறிக்கை, மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் இன்று நேரடியாக ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகியோர், “மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்றதால்தான் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. திமுக அரசு எந்த விஷயத்திலும் சரியாக கவனம் செலுத்துவதில்லை.

எப்போதும் நிகழ்வுக்குப் பின்னரே நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரையில், மதுரையில் மதம் தொடர்பான பிரச்னை வந்ததே கிடையாது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரை, திமுக பலிகடாவாக மாற்றிவிட்டது. நாங்கள் 31 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்திருக்கிறோம். அதிமுக மீது வேண்டும் என்றே பழியைப் போட்டு திமுக உள்நோக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில், நீதிமன்றத்தின் உத்தரவைக் கேட்டு நடப்போம். வக்ஃபு போர்டு தலைவராக இருக்கும் நவாஸ் கனி நேரடியாகச் சென்று ஆய்வு செய்திருக்க வேண்டிய தேவையில்லை. பாஜக ஆர்ப்பாட்டம் குறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர். அறிக்கையை திரும்பப் பெறவில்லை என்றால், நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ரூ.67,000-க்கு டிக்கெட் வாங்கியும் 5 பேர் மட்டுமே பார்த்த விடாமுயற்சி.. எங்கு தெரியுமா?

முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டம் ஜனவரி 30ஆம் தேதி நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் நகரைச் சேர்ந்த இரு சமூகத்தினருக்கும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும், அதில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்கமாட்டோம் என அதிமுக பிரதிநிதியைத் தவிர்த்து அனைவரும் ஒப்புக் கொண்டனர்” என தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Hariharasudhan R

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

1 day ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

1 day ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

1 day ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

1 day ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

1 day ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

1 day ago

This website uses cookies.