செமஸ்டர் தேர்வுகள்.. புதிய தேதிகள் அறிவிப்பு : அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய தகவல்!!!
பேருந்து, ரயில், விமானம் என அனைத்து போக்குவரத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது வரை சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை நீடிக்கப்பட்டிருக்கிறது. மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் (டிசம்பர் 3, 4) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் டிச.4ம் தேதி நடைபெற இருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வுகளும் ஒத்துவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி டிச.11ம் தேதி தொடங்கி 2024 பிப்ரவரி 17ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டிருக்கிறது.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.