சேலம் : எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதிமுக சேலம் புறநகர் மற்றும் மாநகர மாவட்டம் சார்பாக ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீதும் பொய் வழக்கு போடும் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஆர்பாட்டத்தின் வாயிலாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தொண்டர்கள் மயங்கி விழுந்த செம்மலையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக தூக்கி சென்றனர்.
அப்போது செம்மலை முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. பின்னர் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் மேடைக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.