புழல் சிறை மருத்துவமனையில் இருந்து படுத்த படுக்கையாக செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக ஆஜர் படுத்தப்பட்டார். பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. தற்போது, செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
புழல் சிறையில், அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதனால், புழல் சிறையில் இருந்து காணொளி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ் அல்லி முன்பாக செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார்.
படுக்கையில் இருந்தவாறு செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டதால், என்ன ஆனது என நீதிபதி கேட்டார். அதற்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதால் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிறைகாவலர் விளக்கம் அளித்தார். நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 52 வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.