கோவை : கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், ராகிங்கை தடுக்க தனி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவக்கல்லுாரியில் நடப்பு கல்வி ஆண்டில், 177 மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளனர். வகுப்புகள் நடந்து வரும் நிலையில், ‘ராகிங்’ என்ற பெயரில் ஜூனியர் மாணவர்களிடம் சீனியர் மாணவர்கள் அத்துமீறுவதை தடுக்கும் விதமாக,டீன் தலைமையில், பேராசிரியர்கள், போலீசார், வழக்கறிஞர், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் உள்ளிட்ட ஏழு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கல்லுாரி டீன் நிர்மலா கூறுகையில், ”இதுவரை ராகிங் புகார் வரவில்லை. ஜூனியர் மாணவர்களிடம் வரம்பு மீறும் சீனியர் மாணவர்களை, கல்லுாரியிலிருந்து நீக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், ராகிங் தடுப்பு குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கமிட்டியில் உள்ள அதிகாரிகளின்.மொபைல் போன் எண்களும் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன,” என்றார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.