கோவை : கோவையில் கொரோனா காலத்தில் நலிவடைந்த 120 குடும்பங்களுக்கு பாஷ் (BOSCH) நிறுவனம் மற்றும் ஏகம் அறக்கட்டளையின் சார்பில் தொழில் பயிற்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அவதியுற்றனர்.
இந்த நிலையில், பாஷ் நிறுவனம் மற்றும் ஏகம் அறக்கட்டளை இணைந்து வேலைவாய்ப்பிழந்த மற்றும் வேலையில் சரிவடைந்த சிறு தொழில் மற்றும் நலிவடைந்த 100 குடும்பங்களை கண்டறிந்து தொழிற்பயிற்சி அளித்தனர்.
மேலும், புதிய சிறு தொழில் தொடங்குவதிற்கான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் வழங்கினர். மேலும் அவர்களின் தொழில் முன்னேற்றம் அடைவதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் தேவையான உதவிகள் வழங்கி வருகின்றனர்.
இதேபோல், முதற்கட்டமாக 20 குடும்பங்களுக்கு பாஷ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் மூலமாக சலூன் கடை, இஸ்திரி கடை, பெட்டிக்கடை அமைத்துக் கொடுத்து தையல் இயந்திரங்களை வழங்கினர்.
இந்த நலத்திட்டங்கள் மூலம் நலிவடைந்த குடும்பத்தினருக்கு நிலையான வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று ஏகம் அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.
தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி…
விஜய்க்கு ஃபத்வா… விஜய் கடந்த மாதம் சென்னை ஒய் எம் சி ஏ பள்ளிவாசலில் பல இஸ்லாமியர்களுடன் ரமலான் நோன்பில்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
This website uses cookies.