Categories: தமிழகம்

மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்.. நாம் தமிழர் கட்சி நிர்வாகி அரங்கேற்றிய லீலை : பள்ளி நிர்வாகம் உடந்தை!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் அருகே கிங்ஃலி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் இந்தப் பள்ளி மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுப்பதாகவும் நாட்டு நலப்பணி திட்டம் என்ற என்.எஸ்.எஸ் முகாம் குறித்த பயிற்சி அளிப்பதாக காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவரும் நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ள சிவராமன் என்ற நபர் பள்ளி முதல்வரை சந்தித்து பேசியுள்ளார். பின்னர் பள்ளி நிர்வாகத்தின் ஒப்புதல் உடன் மாணவர்களுக்கு வேண்டிய பயிற்சியை அளித்து வந்ததாக தெரிகிறது.

இதில் கடந்த 4ம் தேதி முதல் 9ஆம் தேதி வரையில் மாணவர்களுக்கு என் எஸ் எஸ் முகம் நடைபெற்று வந்ததாக தெரிகிறது.

இதில் மாணவ மாணவிகளிடையே பாலியல் அத்திமீறலை அரங்கேற்றிய நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் சிவராமன் மாணவிகளை மிரட்டி அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

பின்னர் இது குறித்து மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறிய நிலையில் மாணவிகளை பப்பாளி பழம் அண்ணாச்சி பழம் மற்றும் எள்ளு உருண்டை ஆகியவைகளை தின்ன ஆசிரியர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் மாணவிகள் சோர்ந்த நிலையில் இருந்த நிலையில் சந்தேகித்த பெற்றோர்கள் இது குறித்து மாணவிகளிடம் கேட்டுள்ளனர்

பின்னர் மாணவிகளின் உறவினர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட நிலையில் பள்ளி நிர்வாகம் இதனை மூடி மறைக்கவும் மாணவிகளின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்களை மிரட்டியதாக தெரிகிறது

பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் தரப்பில் சைல்ட் லைன் புகார் எண்ணிற்கு புகார் தெரிவித்துள்ளனர்

பின்னர் இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில் நடந்த சம்பவம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

இது குறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர் புகாரின் பேரில் பர்கூர் டிஎஸ்பி பிரித்விராஜ் சௌக்கான் விசாரணை மேற்கொண்டார் பின்னர் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பர்கூர் டிஎஸ்பி மற்றும் காவல் துறையினர் பள்ளி மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடையே விசாரணையை தொடங்கினர் இது பள்ளி நிர்வாகம் சார்பில் முன்னுக்குப் பின் முரணான பதில் வெளியான நிலையில் சந்தேகித்த போலீசார் பள்ளி மற்றும் சம்பந்தப்பட்ட சிவராமன் உறவினார்கள் என 5 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் இந்த சம்பவத்தில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் சிவராமனுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது மேலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் சிவராமன் மாவட்டத்தில் பல்வேறு தனியார் பள்ளி பள்ளிகளில் நாட்டு நலப்பணி திட்டம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது

இதில் எத்தனை மாணவிகள் இதுவரை பாதிப்படைந்துள்ளனர் என்ற விசாரணையும் மெல்ல சூடு பிடிக்க துவங்கியுள்ளது நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் பயிற்சி என்ற பெயரில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக போஸ்கோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் வெளியான சில மணி நேரங்களில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவராமனை கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பதில் சொல்லுங்க.. பதறி ஓடிய அமைச்சர்.. சட்டென முடிந்த திமுக ஆர்ப்பாட்டம்!

திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…

16 minutes ago

இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!

விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…

2 hours ago

அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…

3 hours ago

மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…

3 hours ago

நிமிடத்திற்கு ஒரு கோடியா..ஐபிஎல் விட அதிக சம்பளம் வாங்கிய டேவிட் வார்னர்.!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…

4 hours ago

விரைவில் இபிஎஸ் – அண்ணாமலை சந்திப்பு? மத்தியில் ஒலித்த குரல்.. பரபரக்கும் அரசியல் களம்!

அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…

5 hours ago

This website uses cookies.