Categories: தமிழகம்

மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்.. நாம் தமிழர் கட்சி நிர்வாகி அரங்கேற்றிய லீலை : பள்ளி நிர்வாகம் உடந்தை!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் அருகே கிங்ஃலி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் இந்தப் பள்ளி மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுப்பதாகவும் நாட்டு நலப்பணி திட்டம் என்ற என்.எஸ்.எஸ் முகாம் குறித்த பயிற்சி அளிப்பதாக காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவரும் நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ள சிவராமன் என்ற நபர் பள்ளி முதல்வரை சந்தித்து பேசியுள்ளார். பின்னர் பள்ளி நிர்வாகத்தின் ஒப்புதல் உடன் மாணவர்களுக்கு வேண்டிய பயிற்சியை அளித்து வந்ததாக தெரிகிறது.

இதில் கடந்த 4ம் தேதி முதல் 9ஆம் தேதி வரையில் மாணவர்களுக்கு என் எஸ் எஸ் முகம் நடைபெற்று வந்ததாக தெரிகிறது.

இதில் மாணவ மாணவிகளிடையே பாலியல் அத்திமீறலை அரங்கேற்றிய நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் சிவராமன் மாணவிகளை மிரட்டி அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

பின்னர் இது குறித்து மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறிய நிலையில் மாணவிகளை பப்பாளி பழம் அண்ணாச்சி பழம் மற்றும் எள்ளு உருண்டை ஆகியவைகளை தின்ன ஆசிரியர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் மாணவிகள் சோர்ந்த நிலையில் இருந்த நிலையில் சந்தேகித்த பெற்றோர்கள் இது குறித்து மாணவிகளிடம் கேட்டுள்ளனர்

பின்னர் மாணவிகளின் உறவினர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட நிலையில் பள்ளி நிர்வாகம் இதனை மூடி மறைக்கவும் மாணவிகளின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்களை மிரட்டியதாக தெரிகிறது

பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் தரப்பில் சைல்ட் லைன் புகார் எண்ணிற்கு புகார் தெரிவித்துள்ளனர்

பின்னர் இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில் நடந்த சம்பவம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

இது குறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர் புகாரின் பேரில் பர்கூர் டிஎஸ்பி பிரித்விராஜ் சௌக்கான் விசாரணை மேற்கொண்டார் பின்னர் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பர்கூர் டிஎஸ்பி மற்றும் காவல் துறையினர் பள்ளி மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடையே விசாரணையை தொடங்கினர் இது பள்ளி நிர்வாகம் சார்பில் முன்னுக்குப் பின் முரணான பதில் வெளியான நிலையில் சந்தேகித்த போலீசார் பள்ளி மற்றும் சம்பந்தப்பட்ட சிவராமன் உறவினார்கள் என 5 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் இந்த சம்பவத்தில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் சிவராமனுக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது மேலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் சிவராமன் மாவட்டத்தில் பல்வேறு தனியார் பள்ளி பள்ளிகளில் நாட்டு நலப்பணி திட்டம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது

இதில் எத்தனை மாணவிகள் இதுவரை பாதிப்படைந்துள்ளனர் என்ற விசாரணையும் மெல்ல சூடு பிடிக்க துவங்கியுள்ளது நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் பயிற்சி என்ற பெயரில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக போஸ்கோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் வெளியான சில மணி நேரங்களில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவராமனை கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

8 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

8 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

9 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

10 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

11 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

14 hours ago

This website uses cookies.